தற்போது தமிழக அரசின் தலைமை செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் மாலதி ஐ.ஏ.எஸ் அவர்கள் நிர்வாக ஆற்றலும் சிறந்த தமிழ் பற்றும் உள்ளவர். இவரை குறித்து அதிகம் தெரியாத விஷயம் – இவர் புற்று நோயின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தகுந்த சிகிச்சைகள் எடுத்து அதிலிருந்து மீண்டு வந்து ஒரு தன்னம்பிக்கையின் உருவமாக திகழ்ந்து வருகிறார் என்பது.
இந்த அனுபவங்களை தினத்தந்தி வாசகர்களுடன் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்களை தங்களுக்கு தருகிறேன். வாழ்கையில், பிரச்சினைகள், போராட்டங்கள் மத்தியில், எதிர் நீச்சல் போட்டு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு இவரது கட்டுரை ஒரு சிறந்த டானிக் என்பதில் ஐயம் இல்லை.